"முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட தேநீர் சூடாக இல்லை"... விளக்கம் கோரி பொறுப்பு அதிகாரிக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்!

0 2346

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பருகுவதற்காக வழங்கப்பட்ட தேநீர் சூடாக இல்லை என, அதற்கான பொறுப்பு அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை அன்று உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற சிவராஜ் சிங் சவுஹானிற்கு கஜுராஹோ விமான நிலையத்தில் தேநீர் மற்றும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

அது குறித்த பணி ராகேஷ் என்ற அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்பாடு செய்த தேநீர் குளிர்ச்சியாகவும் தரம் குறைந்ததாகவும் இருந்துள்ளது. இதனையடுத்து, ராகேஷிடம் விளக்கம் கோரி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments